search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கோவிலூர் கர்ப்பிணி பெண் கொலை"

    திருக்கோவிலூர் அருகே கர்ப்பிணி மனைவியை கொன்று நாடகமாடி 6 நாட்களாக தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அருகே உள்ள அருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 38). இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு பெனித்தா (2) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது புஷ்பா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    கடந்த 15-ந் தேதி காலை புஷ்பா வீட்டின் அருகே இருக்கும் கரும்பு தோட்டத்தில் உள்ள பம்பு செட் கிணற்றுக்கு குளிக்க சென்றார். அங்கு அவர் கழுத்தில் துண்டால் இறுக்கி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மேலும் அவர் கழுத்தில் அணிந்து இருந்த நகை மற்றும் காதில் கிடந்த கம்மல் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பாலை பந்தல் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் இந்த கொலை தொடர்பாக குற்றவாளியை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசாரை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டு இருந்தார். தனிப்படையினரும் கொலையாளியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். கடந்த 5 நாட்களாக குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்த நிலையில் புஷ்பா கொலை தொடர்பாக அவரது கணவர் ராமதாஸ் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது.

    அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-

    ராமதாஸ் மும்பையில் கூலி வேலை பார்த்து வந்தார். இதனால் அடிக்கடி மும்பை சென்று வந்தார். அப்போது புஷ்பா தனது தாய் வீடான விலந்தைக்கு சென்று அங்குள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராமதாஸ் சொந்த ஊர் திரும்பினார்.

    அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மேலும், புஷ்பாவை நீ வேலைக்கு செல்லக்கூடாது என்று கூறி நிறுத்தினார். புஷ்பா பயன்படுத்தி வந்த செல்போனையும் பறித்து கொண்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு முற்றியது.

    மேலும் ராமதாஸ், தனது மனைவியை கொடுமை படுத்த தொடங்கியுள்ளார். தன்னை புஷ்பா மதிக்காமலும், தனது பேச்சை கேட்காமலும் இருந்ததால் ராமதாஸ் ஆத்திரத்துடன் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து புஷ்பாவை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதன்படி கடந்த 15-ந் தேதி காலை புஷ்பா வீட்டில் அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்கு குளிக்க சென்றார். அப்போது ராமதாசும் பின்தொடர்ந்து சென்றார். அந்த நேரத்தில் புஷ்பாவின் கழுத்தில் துண்டை வைத்து இறுக்கி கொலை செய்து உள்ளார்.

    மேலும் உடலை அங்கேயே போட்டு சென்றால் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணிய ராமதாஸ், வழக்கை திசைதிருப்ப நகைக்காக புஷ்பாவை யாராவது கொலை செய்திருக்கலாம் என்று நம்ப வைப்பதற்காக புஷ்பா கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயின், ஒரு காதில் கிடந்த கம்மல் ஆகியவற்றை பறித்துக் கொண்டார். மற்றொரு காதில் கிடந்த கம்மலை கழற்ற முடியாமல் விட்டு சென்றுள்ளார்.

    புஷ்பாவின் முகத்தை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக அவரது முகத்தை விவசாய நிலத்தில் உள்ள சேற்றில் அமுக்கி வைத்துள்ளார்.

    பின்னர் ராமதாஸ் அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் குளிக்க சென்ற மனைவியை காணவில்லை என அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அப்போது வயல்வெளியில் புஷ்பா பிணமாக கிடப்பதை அந்த பகுதியில் வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ராமதாசும் அங்கு சென்று பார்த்தார். புஷ்பாவின் உடலைபார்த்து கதறி அழுதுள்ளார்.

    பின்னர் புஷ்பாவின் உடலை அங்கிருந்து தனது வீட்டுக்கு தூக்கி சென்று, முகத்தில் இருந்த சேற்றை சுத்தம் செய்துள்ளார். மேலும் தன் மீது யாரும் சந்தேகப்படாமல் இருக்க கதறி கதறி அழுத வண்ணம் இருந்துள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ராமதாசை போலீசார் கைது செய்தனர்.

    கர்ப்பிணி பெண் கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார். #Tamilnews
    திருக்கோவிலூர் அருகே கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு 4 நாட்களாகியும், இதுவரை எந்த துப்பும் போலீசுக்கு கிடைக்கவில்லை. இதனால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு 2 வயதில் பெனிதா என்ற பெண் குழந்தை உள்ளது.

    தற்போது புஷ்பா 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். கடந்த 15-ந் தேதி காலை புஷ்பா வீட்டின் அருகே உள்ள பம்பு செட் கிணற்றுக்கு குளிக்க சென்றார். பின்னர் அவர் அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருப்பாலபந்தல் போலீசார் விரைந்து சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    புஷ்பா துண்டால் கழுத்து இறுக்கப்பட்டு சகதியில் முகத்தை அமுக்கி கொலை செய்யப்பட்டிருந்தார். அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையும் திருடு போயிருந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. புஷ்பாவுக்கும், அவரது கணவர் ராமதாசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ராமதாஸ் மும்பையில் தங்கியிருந்து வேலைபார்த்து வந்தார். அவர் ஊருக்கு வரும்போது மனைவியிடம் தகராறு செய்து வந்தது தெரியவந்தது.

    இந்தகொலையில் ராமதாசுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்தனர். இதையொட்டி ராமதாஸ், புஷ்பாவின் மாமனார் தேவநாதன், உறவினர் சந்தோஷ் ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    குடும்ப பிரச்சனை காரணமாக ராமதாஸ் மும்பையை சேர்ந்த கூலிப்படையினரை வரவழைத்து புஷ்பாவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

    இந்த கொலையில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ் ஆகியோர் இடம்பெற்றனர்.

    இந்த தனிப்படையினர் ராமதாசை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது செல்போனை கைப்பற்றி அவர் யார்? யாரிடம் எப்போது பேசியுள்ளார் என்ற விவரங்களை ஆய்வு செய்தனர். ஆனால் சரியான தகவல் கிடைக்கவில்லை.

    புஷ்பா கொலை செய்யப்பட்டு 4 நாட்களாகியும், இதுவரை எந்த துப்பும் போலீசுக்கு கிடைக்கவில்லை. இதனால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

    திருக்கோவிலூர் அருகே கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மும்பை கூலிப்படையினருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 35). இவரது மனைவி புஷ்பா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு பெனித்தா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

    தற்போது புஷ்பா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் புஷ்பா அருகில் உள்ள விவசாய பம்பு செட் கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் கொலை செய்யப்பட்டார். கரும்பு தோட்டத்தில் புஷ்பா பிணமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி விரைந்து சென்று விசாரணை நடத்தினார். புஷ்பா கழுத்தில் துண்டால் இறுக்கி சகதியில் முக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    மேலும் அவர் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து ராமதாஸ் வீட்டுக்கு சென்று படுத்துக் கொண்டது.

    இதனால் போலீசாருக்கு ராமதாஸ் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன. ராமதாசுக்கும், புஷ்பாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    புஷ்பா தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் புஷ்பா வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டார் என்பதும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் புஷ்பாவின் கணவர் ராமதாஸ், மாமனார் தேவநாதன், உறவினர் சந்தோஷ் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ராமதாஸ் வைத்திருந்த செல்போனையும் போலீசார் கைப்பற்றினர்.

    ராமதாஸ் செல்போனில் யார்-யாரிடம் பேசியுள்ளார் என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    மேலும் ராமதாஸ் மும்பையில் கூலி வேலை பார்த்து வந்ததாகவும், ஊருக்கு வரும்பேதெல்லாம் மனைவியிடம் தகராறு செய்ததும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து மும்பையை சேர்ந்த கூலிப்படையினரை வரவழைத்து அவர்கள் மூலம் புஷ்பாவை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் நேற்று இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திருப்பாலபந்தல் போலீஸ் நிலையத்துக்கு நேரில் வந்து 2 மணி நேரம் விசாரனை நடத்தினார்.

    விசாரணையில் ஏதும் முன்னேற்றம் காணப்பட்டதாக தெரியவில்லை. அதனை தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன் மற்றும் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    திருக்கோவிலூர் அருகே கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து கணவர் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி புஷ்பா (வயது 28). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 2 வயதில் வினிதா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தற்போது புஷ்பா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று தனது மகளை வீட்டில் விட்டு விட்டு புஷ்பா மட்டும் அருகில் உள்ள பம்பு செட்டில் குளிக்க சென்றார். நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    அவரை தேடி சென்ற போது அருகே உள்ள பம்பு செட் கரும்பு தோட்டத்தில் புஷ்பா பிணமாக கிடந்தார். அவரது முகம் சகதியில் அமுங்கிய நிலையில் காணப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பாலபந்தல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புஷ்பாவின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரது கழுத்தில் துண்டால் இறுக்கி கொலை செய்திருப்பதற்கான அடையாளம் காணப்பட்டது. மேலும் புஷ்பா கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்க சங்கிலி மற்றும் காதில் கிடந்த கம்மல் ஆகியவைகளை காணவில்லை.

    இந்த கொலையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது. அது புஷ்பா பிணமாக கிடந்த இடத்தை மோப்பம் பிடித்து அங்கும் இங்குமாக ஓடியது.

    பின்னர் நேராக புஷ்பாவின் வீட்டுக்குள் சென்று படுத்து கொண்டது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதனால் போலீசாருக்கு புஷ்பாவின் கணவர் ராமதாஸ் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் மனைவியை கொலை செய்து விட்டு, நகையை பறித்து கொண்டு, புஷ்பாவின் உடலை அங்கே போட்டு விட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

    இது தொடர்பாக புஷ்பாவின் கணவர் ராமதாஸ், மாமனார் தேவநாதன் மற்றும் உறவினர் சந்தோஷ் ஆகியோரை பிடித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×